மட்டக்களப்பு பாலமீன்மடுவில் இளைஞனின் சடலம் மீட்பு!


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

பாலமீன்மடு கிணற்றடி வீதியில் உள்ள வீட்டில் இருந்து பாலையா ஜெயகாந்தன் என்னும் 16வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கழுத்தல் சீலை சுற்றப்பட்ட நிலையில் குறித்த இளைஞனின் சடலம் வீடு ஒன்றின் அறையொன்றில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சடலம் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment