யாழ்ப்பாணம் காங்கேசன் துறை கடற்பரப்பில் 5 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
5.6 கிலோ கிராம் ஹெரோயின் இன்றைய தினம்(9) மதியம் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
பெறுமதி 5 கோடி ரூபா பெறுமதியான குறித்த ஹெரோயினை கடத்தியவர்கள் அதை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காங்கேசன் துறை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.


















0 comments:
Post a Comment