“இயேசுவின் பின்னால் பரபாஸ்” காவியம்!


தவக்கால திருநாளை முன்னிட்டு இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும்
“இயேசுவின் பின்னால் பரபாஸ்”  திருப்பாடுகளின் காட்சிகளின்  ஆற்றுகை இன்றும் [04.04.2017 ]  நாளையும் [05.04.2017]  யாழ்ப்பாணத்தில்  நடைபெற உள்ளது.

குறித்த  இரு நாட்களும் யாழ்ப்பாணம்  நாவாந்துறை புனித பரலோக மாதா ஆலயத்தில்  மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள  இவ் ஆற்றுகையில் 200  அடி  அகன்ற மேடையில் நூற்றுக் கணக்கான நாடகக்  கலைஞர்கள்  பங்கு கொள்ள உள்ளனர்.

யாழ் மறைமாவட் ட  ஆயர்  ஜஸ்டின் பேனாட் ஆண்டகையின் ஆசியுடன் அருட் திரு அன்ரன் பாலாவுடன்  கலைஞர் பாலச்சந்திரனின்  நெறியாள்கையில்  தயாரிக்கப்பட்ட  நாடகத்திற்கான இசையினை இசைத்தென்றல் ஜேசுதாசனும் , பின்னணி இசையினை  கலைவாணர் கண்ணன். முரளி , ஜெயராம்,  மற்றும் சஜீவனும் வழங்க, ஒளி ஒலி, வேட உடை  ஒப்பனையை மீசாலை  சாள்ஸ் நெறிப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்





Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment