வடமாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக வடமாகாண சபையினால் சுமார் 23 இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில், அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை முன் வைத்து , விசாரணை குழு அமைத்து , குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் அறிக்கையில் குறிப்பிட்ட குற்றசாட்டு தொடர்பில் தன்னிலை விளக்கம் கொடுக்க என இதுவரை மாகாண சபையில் ஐந்து அமர்வுகள் நடைபெற்றுள்ளன. அதற்காக 20 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதேவேளை குறித்த விசாரணை குழுவிற்காக 3 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது என தெரியவருகிறது. இந்த விசாரணைக்காக மாகாண சபை நிதி 23 இலட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. இது மாகாண சபை நிதி வீண் விரயமாக்கப்படவில்லையா ? என இன்றைய சபை அமர்வு முடிவடைந்த பின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் ஊடகவியாளர் மத்தியில் விசனத்துடன் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment