புத்தளம் பொலிஸ் பிரவுக்குட்பட்ட தில்லையடி பகுயில் தந்தையால் தாக்கப்பட்ட 24 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் கிரிக்கெட் மட்டையினால் மகன் தாக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாகவும், சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் இடத்திற்குச் சென்ற புத்தளம் பதில் நீதவான் ஏ. எம். சம்சு ராபி நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட இளைஞரின் தந்தை புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment