வட மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களை முதலமைச்சர் பொறுப்பேற்றார்! (VIDEO)


வட மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று புதன் கிழமை மாலை வடக்கு ஆளுநர் முன்பாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யவென முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்கு கல்வி மற்றும் விவசாய அமைச்சர்களை பதவி விலக்க பரிந்துரை செய்திருந்தது.

அதனை அடுத்து இரு அமைச்சர்களும் தமது பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் கடந்த 14 ஆம் திகதி வடமாகாண சபை அமர்வில் கோரினார்.

அதனை அடுத்து விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த 15 ஆம் திகதியும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கடந்த 20ஆம் திகதி (நேற்றைய தினம்) தமது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சரிடம் கையளித்திருந்தனர்.








Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment