புதுக்குடியிருப்புப் பகுதியில் ஒரு பகுதி காணி இன்று விடுவிப்பு!


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதற்கட்டமாக ஏழரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது  14ஆம் திகதி முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றம் பெற்றிருந்தது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 49 பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை இராணுவம் கையகப்படுத்தியிருந்தது.  சுமார் 60 வருடங்களுக்கு மேலாக குறித்த காணிகளில் வசித்து வந்த மக்கள், கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது அவர்களது காணிகளை படையினர் கையகப்படுத்தியிருந்தனர்.

தாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி பல போராட்டங்களை நடத்தியும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் உரிய தீர்வு கிடைக்காத நிலையில், பொறுமை இழந்தவர்களாய் இம் மக்கள் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை, 7.5 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ள இராணுவம், மிகுதிக் காணிகளை 3 மாத காலத்திலும் பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்திருந்த காணியை 6 மாத காலத்திலும் விடுவிப்பதாகத் தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment