இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐவரும் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மன்னார் நிதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் பாம்பன்மடு ஆரோக்கிய நகர் மற்றும் பிரான்சிஸ் நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குறித்த ஐந்து மீனவர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டு தாழ்வுபாட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த ஐவரும் இன்று மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment