பிச்சைக்காரிக்கு அடித்த அதிர்ஷ்டம்!


கேரளாவில் உள்ள பிரதான கடைத்தெருக்கள், கோயில்களில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வரும் பிச்சைக்காரி ஒருவர் தனக்கு கிடைக்கும் பணத்தில் வைத்து அருகில் உள்ள லாட்டரி கடையில் தினமும் ஒரு டிக்கெட் வாங்கி செல்வார்.

சத்திரம் ஒன்றில் தங்கி வந்த இவருக்கு ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக லாட்டரி டிக்கெட்டில் ரூ.1 லட்சம் விழுந்துள்ளது.

ஐந்து பத்து ரூபாய் நோட்கள் தான் தன் வாழ்நாளில் மிகப்பெரிய நோட்டுகள் என நினைத்து வந்த இவருக்கு, அந்த 1 லட்சம் ரூபாய் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

அளவில்லா சந்தோஷத்தில் இருக்கும் இவர், அந்த பணத்தின் மூலம் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் வசிக்க இருப்பதாகவும், மேலும் சிறிய பெட்டிக்கடை ஒன்றை வைத்து இனிமேல் பிழைப்பு நடத்தவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தெருக்களில் அலைந்து திரிந்து வாழ்க்கை நடத்தி பழக்கப்பட்ட எனக்கு, தற்போது ஒரு வீட்டில் வசிக்கப்போகிறேன் என்பதை நினைக்கும்போதே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment