விராட் கோஹ்லி மதிப்புமிக்க விஷ்டன் விருதுக்கு சொந்தக்காரரானார்!


கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிகமுக்கியமானதாக கருதப்படும் விருதான விஷ்டன் விருதை விராட் கோஹ்லி வென்று வரலாறு படைத்துள்ளார்.

அண்மைய நாட்களில் அவரது திறமைகளைக் கருத்தில் கொண்டே இந்த விருதுக்கு கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் 75 , ஒருநாள் போட்டிகளில் 92 , T20 போட்டிகளில் 106 எனும் சராசரியை கோஹ்லி இந்த பருவகாலத்தில் கொண்டிருந்தார்.

இதன்காரணத்தால் அவர் விஷ்டன் சஞ்சிகையின் ‘ஆண்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்’ விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2008 , 2009 ம் ஆண்டுகளில் விரேந்தர் சேவாக்கும் , 2010 ம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கரும் இந்த கௌரவத்தைப் பெற்றுக்கொண்ட இந்திய வீரர்களாவர்.

அதேபோன்று மகளிர் பிரிவில் ‘ஆண்டின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை’ விருதுக்காக ஆஸ்திரேலியாவின் மகளிர் வீராங்கனை எல்லிஸ் பேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மதிப்புமிக்க விஷ்டனின் 5 வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஹ் , யூனுஸ் கான், இங்கிலாந்தின் சகலதுறை வீரர் கிரிஸ் வோக்ஸ் , 22 வயதான இளம் வீரர் பென் டக்கட் ,ரோலண்ட் ஜோன்ஸ் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.


கிரிக்கெட் வீரர்கள் வாழ்வில் அவர்களுக்கு கிடைக்கும் மிகமுக்கியமான கௌரவமாக ‘விஷ்டன் விருது’ காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment