பங்களாதேஷ் அணியை 9 விக்கட்டுக்களால் வீழ்த்தி இந்தியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!


வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டி பங்களாதேஷ் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் பர்ஹிம்ஹாமில் நேற்று இடம்பெற்றது.

போட்டியின் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட பங்களாதேஸ் அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 264 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஸ் அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக தமின் இக்பால் 70 ஓட்டங்களையும் , முஸ்பிகுர் ரஹீம் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அணித்தலைவர் முஷரபே மொர்டாசா ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் , பிரவீன் குமார் , ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் ஜாதவ் ஆகியோர் இரண்டு விக்கட்டுக்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.

ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கட்டை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு 265 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 40.1 ஓவர்கள் நிறைவில் 1 விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹிட் சர்மா ஆட்டமிழக்காது 123 ஓட்டங்களையும் , அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிகர் தவான் 46 ஓட்டங்களை பெற்றார்.

அதன்படி, எதிர்வரும் 18ம் திகதி  இடம்பெறவுள்ள வெற்றியாளர் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா அணி மோதவுள்ளது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment