தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தை முதலமைச்சரிடமே விட்டுவிடுங்கள் - ஜனாதிபதி!


வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி விலக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு ஆளுநர் கொண்டு சென்றார்

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி  ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் வடமாகாண சபை தொடர்பில் முடிவெடுக்கும் விவகாரத்தை முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு தெரிவித்துள்ளார் அத்துடன் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு தலையிடுவது முரண்பாடாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment