வடக்கிற்கு பெருமை சேர்த்த மன்னார் மாணவி!


அகில இலங்கை ரீதியில் தமிழ் பிரிவு பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற சமூக, விஞ்ஞான போட்டியில் மன்னார் மாவட்ட மாணவியொருவர் 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்கும் செலஸ்டின் அஜென்டினா என்ற மாணவியே இந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர், தமிழ் மொழி மூலம் நடைபெற்ற சமூக, விஞ்ஞான போட்டியில் 2ஆம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 3 ஆம் இடத்தினையும் பெற்று, பாடசாலைக்கும் நானாட்டான் கோட்டத்திற்கும் மன்னார் வலயத்திற்கும் வடக்கு மாகாணத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment