தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!


மட்டக்களப்பு ஆரையம்பதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி கோபாலகிருஷ்ணன் பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான ரொயேஸ் ரொனிலா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கிடைத்த தகவல் ஒன்று அமையவே சடலத்தை மீட்டதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment