பிஞ்சுக் குழந்தைகள் மீது கைவைத்த காமுக மிருகங்கள்: திருகோணமலையில் பெரும் கொந்தளிப்பு!


திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெருவெளி கிராமத்து ஆரம்ப பாடசாலை மாணவிகள் மூவர், இளைஞர்களினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதனையடுத்து ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து இளைஞர்கள், அக்கிராம மக்களினால் சிறைபிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டுள்ளதுடன் பின்பு மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மாணவிகள் மூவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளிகளை கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தக் கோரியும், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும்,  கிளிவெட்டி மஹா வித்தியாலய மாணவர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இணைந்து இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் அங்கு வேறு சில பாடசாலை மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment