இரணைதீவு மக்களை நோக்கி கடற்படையினர் ஆபாச சைகை காட்டி மிரட்டினாரா ?


கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இரணைதீவு மக்கள் தங்கள் பூர்வீக நிலைத்தினை தம்மிடமே மீள கையளிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை கடற்படையினர் எடுத்து வருவதாகவும் மக்களை நோக்கி கைகள் மூலம் ஆபாச சைகைகளை காட்டி அச்சுறுத்தி இருந்தனர் எனவும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

அந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் ‘ கடற்படையினர் புகைப்படம் எடுத்தவரை நோக்கியே ஆபாச சைகை காட்டினார் எனவும் மக்களை நோக்கி காட்டவில்லை எனவும் கருத்திட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment