ஊவாபரணகம – கட்டுகல்ல பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் பெண்ணெருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊவாபரணகம – கட்டுகல்ல பகுதியில் ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் குறித்த பெண் நேற்று (திங்கட்கிழமை) மாலை கைது செய்யப்பட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது வீட்டில் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (செவ்வாய்க்கிழமை) வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை நீதிமன்றில் கையளிக்கவுள்ளதாகவும் ஊவா பரணகம பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




0 comments:
Post a Comment