யாழ். பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்!


சேவையின் நிமித்தம் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சஞ்ஜீவ தர்மரட்ன, கொழும்புக்கு இடமாற்றம் பெற்று சனிக்கிழமை (10) செல்லவுள்ளார்.

கடந்த வருடம் ஜீலை மாதம் முதல், தற்போது வரையான காலப்பகுதி வரை, யாழ். மாவட்டத்தில் உள்ள 17 பொலிஸ் நிலையங்களின் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்ஜீவ தர்மரட்ண கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில், புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக கொழும்பு போக்குவரத்து பிரிவில் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பத்மஸ்ரீ பெர்னாண்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்ததவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதி பொலிஸ்மா அதிபர், சனிக்கிழமை (10) கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment