ரயிலில் பாய்ந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை!

பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஓடும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொடி மெனிக்கே ரெயிலில் பாய்ந்தே மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பேராதனை பகுதியில் வைத்து நேற்று காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரெயிலில் பாய்ந்தே அவர் தற்கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த மாணவி பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment