நாளை பதவியேற்பு – அனந்தி, சர்வேஸ் அமைச்சர்களாக நியமிப்பு! (VIDEO)


தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரை அமைச்சர்களாக முதலமைச்சர் நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கந்தையா சர்வேஸ்வரன் கல்வி அமைச்சராகவும் அனந்தி சசிதரன் சமூகசேவைகள் மற்றும் மகளிர் விவகாரம், புனருத்தாரன அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் முன் அமைச்சர்ளாக பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சர்களின் பதவியேற்புத் தொடர்பாக ஆளுநர் அலுவலகத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கல்வி அமைச்சராக தமிழரசுக் கட்சியைச்சேர்ந்த ஆர்னோல்ட்டை நியமிக்குமாறு தமிழரசுக் கட்சி நேற்று முன்தினம் சிபாரிசு செய்திருந்தது. இதனை நிராகரித்த முதலமைச்சர் அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் தானே முடிவெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வடக்கு மாகாணசபையில் முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்றவர் என்ற அடிப்படையில் அனந்தி சசிதரனும் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அக் கட்சிக்கு ஒரு அமைச்சு வழங்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் கந்தையா சர்வேஸ்வரனும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment