ரயிலில் இருந்து கேரள கஞ்சா மீட்பு!


தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த நேற்று முன்தினம் பயணித்த ரயிலில் இருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப் பொதிகளை மடு பொலிஸார் மீட்டுள்ளனர்.

தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயிலில் கஞ்சாப்பொதிகள் கடத்தப்படுவதாக மடு பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு தலைமன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்தனர்.

மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.மடவல தலைமையில் விரைந்து செயற்பட்ட விசேடபொலிஸ் குழுவினர், மடு ரயில் தரிப்பிடத்தில் பரிசோதனையை மேற்கொண்டபோது இரண்டு பையில் சுமார் 20 கிலோ 585 கிராம் எடை கொண்ட கஞ்சா போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

இந்த கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என்று இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment