சிவலிங்கா - திரை விமர்சனம்!


ராகவா லாரன்ஸ் - ரித்திகா சிங் ஜோடி நடிக்க "ட்ரை டண்ட் ஆர்ட்ஸ்" ஆர்.ரவீந்திரன் வழங்க, தமன் எஸ், இசையில் சர்வேஷ் முராரி ஓளிப்பதிவில் பி.வாசு இயக்கத்தில் 'சந்திரமுகி', 'காஞ்சனா' வரிசையில் வந்திருக்கும் ஹாரர் படமே "சிவலிங்கா".

கதைப்படி, ரஹீம் - சக்திவேல்வாசு மற்றும் அவரது அப்பா அப்துல் - சந்தானபாரதி இருவரும் பிரியாணி மாஸ்டர்கள். சங்கீதா எனும் நடிகை சாராவும் அவரது அப்பாவான ராதாரவியும் சைவ உணவு மாஸ்டர்கள். இந்த இருகுடும்பமும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் நான் வெஜ்க்கு அவர்களுமாக, வெஜ்க்கு இவர்களுமாக சமைப்பார்கள். இந்த நெருக்கமானது, சக்திவேல் வாசுவுக்கும், சாராவுக்கும் இடையே மதம் தாண்டிய காதலை ஏற்படுத்துகிறது.

ஆனால், இவர்களுடைய காதல் சாராவின் அப்பா ராதாரவிக்கு பிடிக்கவில்லை. சக்தி சமைப்பதோடு மட்டுமில்லாமல் பந்தைய புறா ஒன்றயும் பாசமாக வளர்த்து பந்தையங்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், வெளியூருக்கு சமையல் ஆர்டர் பிடிப்பதற்காக ரெயிலில் சென்று கொண்டிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர், திட்டம் போட்டு சக்தியை ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிடுகிறார்.

இந்தகொலையில் ரெயில்வே போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காததால் சக்தி தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கை முடிக்கின்றனர்.

ஆனால், காதலி சாராவோ இது தற்கொலை இல்லை, கொலை... என்று போலீசில் புகார் கொடுக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் செல்கிறது. சிபிசிஐடியில் நேர்மையான, போலீஸ்அதிகாரியாக இருக்கும் சிவலிங்கேஷ் - ராகவாலாரன்ஸுக்கும், சத்யா - ரித்திகா சிங்கிற்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த கையோடு, ரஹீம் - சக்தி கொலை வழக்கு, சிவலிங்கேஷ் - லாரன்ஸ் வசம் வருகிறது. அவர், இதைப்பற்றி விசாரிப்பதற்காக தனது இளம் மனைவியுடன் வேலூரில் கடுகாடு அருகில் இருக்கும் ஒருபங்களாவில் குடியேறுகிறார்.

அங்கு தங்கியதும் அவ்வவ்போது சில பல அமானுஷ்ய விஷயங்கள் நடந்து இவர்களை பயமுறுத்துகிறது. இந்நிலையில், அந்த வீட்டில்திருட வந்த பட்டு குஞ்சம் - வடிவேலு, ராகவா லாரன்சிடம் மாட்டிக் கொள்கிறார். தான் சிபிசிஐடி என்பது வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வடிவேலுவையும் அங்கேயே தங்க வைக்கிறார் லாரன்ஸ்.

இந்நிலையில், ரித்திகா சிங் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தெரியவே, இதை பார்க்கும் வடிவேலு, லாரன்சிடம் சொல்ல, அவர் நம்ப மறுக்கிறார். ஒருகட்டத்தில் ரித்திகாவின் உடம்பில் ஏதோ ஆவி புகுந்து இருப்பது லாரன்ஸ் மற்றும் வடிவேலுக்கு தெரியவர, அந்த ஆவி கொலை செய்யப்பட்ட ரஹீம் - சக்தியின் ஆவிதான் என்பதை தெரிந்துகொள்கிறார்கள்.

சக்தியின் ஆவி ரித்திகா சிங்கின் உடம்பில் புகுந்துகொண்டு, தன்னை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கிறது. அந்த ஆவியின் ஆசையை நிறைவேற்றினால் தான் தன்னுடைய மனைவியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில்,

ராகவா லாரன்ஸ் அதன் பிறகு என்ன முடிவெடுத்தார்? சக்தியை கொலைசெய்தது யார்? அவரை எதற்காக கொன்றார்கள்? சக்தியை கொன்றவர்களை ராகவா லாரன்ஸ் கண்டுபிடித்தாரா? தன் மனைவி ரித்திகாவின் உடம்பில் இருந்து சக்தியின் ஆவியை வெளியேற்றினாரா...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் விறுப்பாகவும், திருப்பங்கள் நிறைந்தும், திகில் கலந்தும் விடை சொல்கிறது "சிவலிங்கா" படத்தின் மீதிக் கதை.

சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக சிவா எனும் சிவலிங்காவாக வரும் ராகவா லாரன்ஸ் நடனம், ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் என எல்லாவற்றையும் கொஞ்சம் ஜாஸ்தி சிறப்பாகவே செய்திருக்கிறார். பேய் படங்களில் இவரை மாதிரி பிய்த்து பெடலெடுக்க வேறு யாராலும் முடியாது என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்.... என்பது சிறப்பு.

கதாநாயகி சத்யாவாக, ரித்திகா சிங், துறுதுறு பெண்ணாக ரொம்பவும் ரசிக்க வைக்கிறார். இவர் பாக்சர் என்பதை மனதில்வைத்து பேயாக வரும்காட்சிகளில் எல்லாம் இயக்குனர் இவரை அந்தரத்தில் தொங்கவிட்டு நடிக்க வைத்திருக்கிறார். ரித்திகாசிங் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

மேலும், இதில் புல் மேக் - அப்பில் புடவையில் வந்து ரசிகனை சீட்டோடு கட்டி போட்டு அசத்துகிறார். அதே போன்று நடனத்திலும் லாரன்ஸுக்கு இணையாக ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் என்பது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

பட்டு குஞ்சமாக, வடிவேலு எந்தவித கெட்டப்பும் இல்லாமல் சாதாரண டவுசர் சட்டையுடன் படம் முழுக்க வந்து சில காட்சிகளில் கடித்தாலும் பல சீன்களில் காமெடியில் கலக்கியிருக்கிறார்.

ரஹீம் எனும் சக்திவேல் வாசுவைமையப்படுத்திதான் மொத்தக்கதையும் நகர்கிறது. ஆவி, ஆன்மா என்றாலும் கிளைமாக்சில் தன்னுடைய வேதனையை சொல்லி இவர் அழும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது. பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்டாகவும் புறா பந்தயக்காரராகவும் சக்திவேல் வாசு கச்சிதம்.

'அறு சுவை' அன்னலட்சுமியாக ஊர்வசி, ரித்திகாவின் தாய் பானுப்பிரியா, தந்தை ஜெயப்பிரகாஷ், சமையல் கிருஷ்ணமூர்த்தியாக ராதாரவி, ரஹீமின் அப்பா அப்துல்லா வாக சந்தானபாரதி, சிபிசிஐடி ஆபிஸராக ஒய்.ஜி.எம். மது வந்தி மற்றும் விடிவி.கணேஷ், சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் கச்சிதம்.


வில்லனாக வரும் ஷாகிர் ஹூசைனும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஜி-துரை ராஜின் கலை இயக்கம், சுரேஸ் அர்ஸின் படத்தொகுப்பு, சர்வேஷ் முராரி ஒளிப்பதிவு உள்ளிட்டவை படத்திற்கு பெரும் ப்ளஸ்.

எஸ்.எஸ்.தமனின் இசையில்" "ஏய் கும்மாங் கும்மாங் குத்து ஏய் பாட்டாளி ஏழைக் கெல்லாம் கூட்டாளி", "ஏய் ரங்கு ரக்கர ரங்கு ரக்கர.. ஏய் டாலடிக்கும் கண்ணக் காரி. ""ஜிம்பு ஜிக்கா ...சிரிக்க வச்சு... ", "சாரா சாரா.. வெற்றி வருது...", "சிவலிங்கா..." ஆகிய பாடல்கள் விஷுவல் எபெக்ட்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸில் அசத்தல்.

பி.வாசு தனது, எழுத்து, இயக்கத்தில், கன்னடத்தில் தான் இயக்கி வெற்றிபெற்ற படத்தையே தமிழிலும் எடுத்திருக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியான ஜனரஞ்சகமான ஹாரர் படத்தை கொடுத்திருக்கிறார். தனது கன்னடப் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு பக்காவாக, பாந்தமாக திரைக்கதையிலும் சற்று மாற்றங்கள் கொண்டுவந்து விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார். ரஹீம் - சக்திகொலைக்கான விசாரணையில் ஒவ்வொரு டுவிஸ்டுகளாக வைத்து அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை படம் முழுக்க கொடுத்திருக்கிறார்... என்பது சிறப்பு.

அதே போன்று கதாபாத்திரங்கள் தேர்வும் மேலும் சிறப்பு. "பொண்ணு முகத்தை பார்க்காம கல்யாணம் பண்ற் வங்க அவங்க, நெருப்புக்கு முன்னாடி கல்யாணம் பண்றவங்க நாம..." என இந்து - முஸ்லீம் திருமணங்களுக்கு இடையேயான வித்தியாசத்தை ராதாரவியின் பாத்திரத்தின் வாயிலாக இரண்டே வரியில் பேச வைத்திருக்கும் ஒன்று போதும், பி வாசுவின் அனுபவ இயக்கத்திற்கு கட்டியம் கூற! வாவ், கீப் இட் அப் வாசு சார்!

மொத்தத்தில் பின் பாதியில், ஒரு சில இழுவை காட்சிகள், லாஜிக் மிஸ்டேக்குகள்இருந்தாலும், பி.வாசு தனது, "சந்திரமுகி"யையும், ராகவா லாரன்ஸ் தனது, "காஞ்சனா"வையும் சேர்த்து "சிவலிங்கா"வை இப்படத்தில் அடிக்கடி வரும் டயலாக் மாதிரியே, "சிவாய நம, நமச்சிவாய...." என சிறப்பாக தந்திருக்கிறார்கள்."

ஆகமொத்தத்தில் 'சிவலிங்கா" ரசிகனுக்கு இருக்கு.. செம 'திரிலிங்கா".
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment