நாளை ரஜினியின் அடுத்தப் படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கபாலி படத்தை அடுத்து நடிகர் ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன்' இரண்டாம் பாகமான '2.0' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை, நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தயாரிக்கறார். கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் இந்தத் திரைப்படத்தை இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ரஜினியின் அடுத்தப் படத்தின் தலைப்பு நாளை வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார். நாளை காலை 10 மணியளவில் இப்படத்தின் தலைப்பு வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார். மும்பையை கதைக்களமாக கொண்டு இத்திரைப்படம் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:
Post a Comment